407. இராகம்: முகாரி. தாளம்: ஆதி.
“ஆரிவ ராராரோ” - என்ற மெட்டு.
பல்லவி
வாருஞ்சபை யோரே வாரும் - சுற்றி
வரிசையு
டனே வாரும்
வாரும் இவ் வாலய வல இடப் பவனியில்
வானவ
ரடி பணிந்து
சரணங்கள்
1. சிற்சில ஆண்டாக
- வெகு
சிரத் தையுடன் முடித்தோம்
பற்பல தீமைகள் வந்திடினும்
அவை
பனிபோ லகலக் கண்டோம் - வாருஞ்சபை
2. அருளுத வியுமுற்றோம் - பெரியோர்
பொருளுத வியும் பெற்றோம்
கருணைக் கடல்நின்
காவல் அனுதினமும்
காத்திடவுங்
கண்டோம் - வாருஞ்சபை
3. இசரவேல் பாளயத்தின்
- மீதில்
இருந்த நல்லே
கோவா
நிசமதாய் இத்திரு ஆலயந் தங்குவார்
நீடூழி காலமாக - வாருஞ்சபை
4. ஞானிசா லோமோன்தான் - கட்டின
நவ ரத்ன ஆலயத்தில்
மானிடர் மகிழ்ந்திட வானவர் இறங்கிய
வண்ணமிங் கருள்தங்க - வாருஞ்சபை
5. பரம எருசா லேம் - நகரின்
பாக்கியம் மரி
பாலன்
பாரதில் அவரது
பளிங்கொளி வீசிட
இரவும் பகல் போ லாம்
- வாருஞ்சபை
6. இகத்தில் நம் மோடுதங்கி
- நமது
இதயம் தம தாக்கி
பரத்தில் என்றுநற்
பாக்கியங் கொடுத்திடும்
பரம னடி துதித்து
- வாருஞ்சபை
No comments:
Post a Comment