நன்றியோடு நான் பாடிடுவேன்
கர்த்தர்
செய்த நன்மைகளை
கிருபையால்
நடத்தினீரே
நன்றி
செலுத்திடுவேன் - 2
1. இம்மட்டும்
நடத்தினவர்
இனியும்
நடத்திடுவார் - 2
கண்மணிப்
போல காத்த இரட்சகர்
கரம்பற்றி
நடத்திடுவார் - 2 - நன்றியோடு
2. தடைகள்
வந்தபோதும்
தாங்கிய
நடத்தினீரே
தடைகள்
வந்தபோதும்
உம் தயவால்
நடத்தினீரே
தடைகளை நொறுக்கி வழிகளைத் திறந்தீர்
தேவனே உம்மைத் துதிப்பேன் - 2 - நன்றியோடு
3. எப்பக்கம்
நெருக்கப்பட்டும்
மடியாமல்
காத்துக்கொண்டீர் - 2
நெருக்கத்தை
பெருக்கமாய் மாற்றினீரே
தேவனே
உம்மைத் துதிப்பேன் - 2 - நன்றியோடு
4. குறைவுகள்
வந்தபோதும்
குறுகாமல்
காத்துக்கொண்டீர் - 2
நன்மையும்
கிருபையும் தொடரச் செய்தீர்
தேவனே
உம்மைத் துதிப்பேன் - 2 - நன்றியோடு
- Sam Moses
No comments:
Post a Comment