பெத்லகேம் சிற்றூரில் புன்னகை தாங்கியே
இயேசு
பாலன் பிறந்தார்
கன்னி
மரியின் வயிற்றிலே காலம் நிறைவேறவே
கர்த்தாதி
கர்த்தர் உதித்தார்
ஆ...
அதிசயம் தெய்வம் மனிதனானது
ஆ...
அற்புதம் வார்த்தை மாம்சமானது
1. மேய்ப்பர்கள்
வந்து துதித்தார்கள்
பலியாம் தேவ ஆட்டுக்குட்டியை
சாஸ்திரிகள்
வந்து தொழுதார்கள்
மீட்க
வந்த உலக மீட்பரை - ஆ... அதிசயம்
2. மீண்டுமாக
இயேசு வருகின்றார்
இராஜாதி ராஜா வாக வருகின்றார்
மோட்சத்திற்கு நம்மை கூட்டிச் செல்லவே
வருகையின்
நாள் சமீபமே - பெத்லகேம்
- Pr. Edward Durisamy
No comments:
Post a Comment