வாக்குமாறா
வல்லவரை வாழ்த்தி பாடிடுவேன்
வானத்தின் வாசல்களை திறந்திடுமே
நிரப்பிடுவார்
1. ஆழமான காயங்களை
ஆற்றிடும் தேவ அன்பு
எண்ணெயும் தைலமும்
சிரசில் வார்த்திடுவார்
2. பாரமான யாவற்றையும்
நீக்கிடும் தூய ஆவி
சுத்தமும் நீதியும்
பெருகச் செய்திடுவார்
3. மாறிடாத மாநேசரை
எப்படி போற்றிடுவேன்
நன்றியால் நிறைந்தே
நாதனைப் பணிந்திடுவேன்
4. ஆழமான சேற்றினின்று
உயிர்ப்பித்து ஜீவன் தந்தார்
இம்மட்டும் காத்தவர்
இனிமேலும் காத்திடுவார்
No comments:
Post a Comment