1. வாக்களித்தீர்
வாக்கின்படியே
வாரும் ஆண்டவரே
பிதாவின் வாக்கு உன்னத பெலனை
தாரும் ஆண்டவரே
எல்லார் மேலும் வல்லமை ஊற்றும்
எல்லார் மேலும் வந்திறங்கும்
அல்லேலூயா வாரும் தேவா
அல்லேலூயா அழைக்கின்றோம்
2. மேல் வீட்டறையில்
சீஷர்கள் மீது
பொழிந்த அருள் மழையை
எங்கள் மீதும் பின்மாரி மழையை
பொழியும் ஆண்டவரே
3. மகிமையின் மேல்
மகிமையடைந்து
மறுரூபமாகட்டுமே
பெலத்தின் மேலே பெலனடைய
நிரப்பும் ஆண்டவரே
4. விண்ணப்ப ஆவி மன்றாட்டு ஆவி
வேண்டும் ஆண்டவரே
கண்ணீர் நதியாய் கண்களும் மாற
ஜெபத்தை தந்திடுமே
No comments:
Post a Comment