புல்லணையிலே பாலகன்
தேவ மைந்தன்
பிறந்தார் இன்று
அன்னை
மரியே தெரியுமா
இவர் கடலில்
நடப்பாரென்று
விண்ணை விட்டு வந்த தேவன் இவர்
சமாதான காரணரே
நமக்காய் தாழ்மை தரித்தார்
நம் பாவம் சுமந்திடவே
1. விண்ணையும்
மண்ணையும் படைத்தவர் இவரென்று அறிவாயோ
கானாவூரினில் அற்புதம் செய்திட வருவாரோ
மன்னவன்
இயேசு இவர்தானே மன்னிக்கும் மாட்சிமை தந்தவரே
கண்கள் திறந்திட செவிகள் கேட்டிட மரித்தோர்
உயிர்த்தாரே
ஊனர் நடந்திட
ஊமை பேசிட உன்னத தேவ மகிமை - புல்லணையிலே
2. குருடரின்
கண்கள் திறந்திடும் இவரால் அறிவாயோ
காற்றும்
கடலும் அமர்ந்திடும் இவரால் அறிவாயோ
கன்மலை
நீரை தந்தவரே கண்மணிப் போல காத்தவரே
கண்கள் திறந்திட செவிகள் கேட்டிட மரித்தோர்
உயிர்த்தாரே
ஊனர் நடந்திட
ஊமை பேசிட உன்னத தேவ மகிமை - புல்லணையிலே
- Ivan Jeevaraj
No comments:
Post a Comment