வாலில்லை என் மகனே நீ தலைதான்
கீழில்லை
என் மகனே நீ மேல்தான்
தரித்தேன் என் நாமம் உந்தன்
மீதில் தான்
வைப்பேன் என்றும் அலங்கார
சீயோனாய்
1. ஒரு வழியாய் சத்துரு வருவான்
ஏழு வழியாய் ஓடிப் போவான் - 2
கர்த்தர் நின்று உனக்காய் யுத்தம் செய்வார்
கண்களால் கண்டு நீ மகிழ்வாய் - 2 - வாலில்லை
2. கூடையும் மா பிசையும்
உன் தொட்டியும்
என்றென்றும் ஆசீர்வதிக்கப்பட்டிடும்
- 2
கையிட்டு செய்யும்
வேலைகளிலும்
கர்த்தரின் ஆசீர்வாதங்கள் நிலைக்கும்
- 2 - வாலில்லை
3. வாக்குத்தத்தம் செய்யப்பட்ட ஸ்தலத்தில்
கொண்டு சேர்ப்பேன் கர்த்தரின் வேளையில்
- 2
கர்ப்பக்கனி
நிலக்கனிகளிலும்
பரிபூரண நன்மை காண்பாய் என்றென்றும் -
2 - வாலில்லை
No comments:
Post a Comment