வாரும்
தூய ஆவியே
தாரும் உமது கிருபையை
வல்லமையோடும்
வரங்களோடும்
வந்து எம்மிலே தங்கி விடும்
1. ஒவ்வொரு நாளும் உமது மகளாய்
உத்தமனாக
வாழ்ந்திடணும்
2. நீங்களே
உலகின் வெளிச்சமென்றீர்
வெளிச்சமாக வாழ்ந்திடனும்
3. நீங்களே தேவ ஆலயம் என்றீர்
பரிசுத்தமாக வாழ்ந்திடனும்
4. நீங்களே எனக்கு சாட்சிகளென்றீர்
சாட்சியாக வாழ்ந்திடனும்
5. மலைமேல் இருக்கின்ற பட்டணம் என்றீர்
மறைந்திருக்காமல்
வெளிப்படனும்
6. கனி தரும் மரமாய் கனிகள் தந்து
கர்த்தரின் நாமம் உயர்த்திடனும்
No comments:
Post a Comment