பல்லவி
வாழ்வெல்லாம்
தம் அன்பை கொண்டாடவே,
வீடெங்கும் சந்தோஷம் உண்டாகவே,
நம் கண் காண தம் வாக்கு நடந்தேறவே
புதிய ஆண்டை தந்தாரய்யா!
- 2
அனுபல்லவி
வறண்டு
வாடும் நம் வாழ்வினை,
திரண்டு
பெருக செய்திடுவார்! - 2
பல்லவி
இருளெல்லாம் ஒளியாக மாறும்,
சுகவாழ்வு விரைவாக தோன்றும்!
அவர் சொன்ன வார்த்தையில் ஒன்றும்,
தவறாமல் நிறைவேறி தீரும்! - 2
சரணங்கள்
1. காத்திருந்த
வாக்குத்தத்தம்,
பின்தொடர்ந்து
நம்முன் வரும்! - 2
பொய்யுரையாத தேவன் அவர்,
இந்த ஆண்டில்
தந்திடுவார்! - 2 - இருளெல்லாம்
2. பாழடைந்து
போனதெல்லாம்,
சீரடைந்து
வந்திடுமே! - 2
இழந்த
நன்மை தேடி வரும்,
இரட்டிப்பாக
தந்திடுவார்! - 2 - இருளெல்லாம்
- Bro. Joshua Victor
No comments:
Post a Comment