சேரக்கூடாத
ஒளியில் வாசம் செய்கிற என் ஆண்டவர்.
அவர் சேருபின்கள்
மத்தியிலும் கேராபின்கள் மத்தியிலும் உலாவி வருகிறார்.
நம் ஆண்டவர்
தான் எல்லா காரியங்களிலும் ஜெயத்தை நமக்கு கொடுக்கிறவர்.
சேர்ந்து
அவரை துதித்து மகிழ்ந்து கொண்டாடுவோம்.
1. முழு இதயத்தோடு உம்மை ஆராதிக்க வந்தோமே
பல இடத்திலிருந்து
நாங்கள் கூடி வந்தோமே
அவர் வழியில்
செல்வோமே சத்தியமாக நடப்போமே
என்னோடு
பேசும் கர்த்தர் நீரே நீர்தானே
அற்புதம்
செய்தாரே அற்புதர் நீர்தானே
நல்வழியில்
நம்மைதானே கூட்டி செல்வாரே
பக்தனும்
நான்தானே பக்தியும் நீர்தானே
அக்கினி
ஞானஸ்நானம் எனக்கு தந்தாரே.
பாடு கூட சேர்ந்து போடு தன்னானே
வீடு வாசல் எல்லாம் தானே தன்னானே (என்)
- 2
2. ஆவிக்குரிய
கண்கள் போதும் வழிதெரியும் என் முன்னாலே
போகும்
வழிகள் எல்லாமே துணையாய் அவரே வருவாரே
ஆவி ஆத்மா
சரீரம் எல்லாம் சாட்சி கொடுக்கும் தெரியாதா
பிதா சுதன்
பரிசுத்த ஆவி எல்லா நாளும் மகிழ்வாரே
அந்தமும்
அவர்தானே சொந்தமும் அவர்தானே
சர்வமும்
அவர்தானே சத்தியமும் அவர்தானே - 2
பாடு
கூட சேர்ந்து போடு தன்னானே
வீடு
வாசலில் எல்லாம் தானே தன்னானே - 2
3. தண்ணீரை
திராட்சை ரசமாய் மாற்றி தந்த அவருக்கு
கண்ணீரை
முற்றிலுமாக துடைத்து எறிய தெரியாதா
விசுவாசமுள்ள
என்னை இழுத்து அணைத்து கொள்வாரே
இதுவரை
கண்டடீராத உச்சிதங்கள் தருவார் - 2
காலம்
அவர்தானே கோலமும் அவர்தானே
காவலும்
அவர்தானே கருணையும் அவர்தானே - 2
பாடு
கூட சேர்ந்து போடு தன்னானே
என் வீடு வாசல் எல்லாம் தானே தன்னானே - 4
- REV. DR. JAWAHAR SAMUEL, DR. DANIEL JAWAHAR SAMUEL
No comments:
Post a Comment