உயர்வான இடங்களில் அமர்ந்திருப்பேன்
எட்டாத
உயரத்தில் நிலைத்திருப்பேன்
கன்மலை
தேனினால் திருப்தியாவேன்
பரலோக
நன்மையால் நிறைந்திருப்பேன்
ஆத்துமாவே
நீ நன்றி சொல்லு
கர்த்தரில்
மனமகிழ்ச்சி அடைந்திரு - 2
அவர்
சொன்ன வார்த்தைகள் நிறைவேறும்
நீ
அவரில் களிகூரு - 2
1. சுகவாழ்வு
உன்னில் துளிர்த்திடுமே
கர்த்தரின்
மகிமை உன்னை காக்குமே - 2
உன் நீதி
உனக்கு முன்னே சென்றிடுமே
கழுகை
போல் உயர பறந்திடுவாய் - 2 - ஆத்துமாவே
2. நித்தமும்
உன்னை நடத்திடுவார்
வறண்ட
எல்லா நாட்களிலும் - 2
ஆத்துமாவை
என்றும் திருப்தியாக்கி
வளமான
வாழ்வை தந்திடுவார் - 2 ஆத்துமாவே
என்
ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி
என்
முழு உள்ளமே
அவர்
பரிசுத்த நாமத்தை ஸ்தோத்தரி
- Apostle D. Alex
No comments:
Post a Comment