210. இராகம்: இந்துஸ்தானி தாளம்: ஆதிதாளம்.
பல்லவி
வாரீரோ?
வினை தீரீரோ? எனைக்
காரீரோ?
ஜீவன் தாரீரோ, யேசு
அனுபல்லவி
வாரேனென்றீர், வரந் தாரேனென்றீர், சுவாமி;
பாரினிலே யெனக்கு யாருமில்லை, துணைக்கு.
- வாரீரோ
சரணங்கள்
1. தேனே, மரிமகனே, தேடி மறுகுங்[1] கோனே,
சேனைகளின் சீமோனே, சிந்தை கலங்கி நானே
கானகமே மேவும் மானது போலானேன்;
வானகம் போன தேவா, ஏனோ வரத் தாமதம்? - வாரீரோ
2. அட்ட[2] திக்கெங்கு
மென்னைத் துட்டப் பாசாசுக் கூட்டம்
இட்டப் படுத்தவல்லோ கிட்ட வளையது, பார்
அடுத்தாலோ, அம்பைத் தொடுத்தாலோ என்ன!
அடுபடையாக[3] நின்று
தடு படை[4] செய்வீர்,
யேசு, - வாரீரோ
3. கோழி தன் குஞ்சு தன்னைக் கூவியழைக்கு நேராய்
கூளி[5] எனை
யிறாஞ்சி[6] ஆழியிலாக்
கிடாமல்
கூப்பிட்டீரே; எனக்கு மாப்பீட்டீரே! ஒதுங்க
தாப்பிட்டீரே[7]; வர
வாக்கிட்டீரே! பின்னை - வாரீரோ
4. காணாத ஆட்டைத் தேடிக் காடெங்கும் சென்றகோன்
நீர்
கண்டுபிடித்த ஆட்டைக் கொண்டு தொழுவஞ் சேர்க்கக்
கருத்துடனே மிக உரித்துடனே[8] இரு
கரத்திலேந்தி வலப் புறத்தில் வைப்பீர்
திண்ணம். - வாரீரோ
5. வீடு எனக்குச் செய்ய மேலோகம் போன தேவா,
கூட இருத்தி வைக்கக் கூப்பிட வாறேனென்றீர்;
கொண்டு வருவீர் முடி, நின்று வருவீர் நொடி;
கண்டு மகிழ்வேன், கூடி நின்று புகழ்வேன்
கெடி[9]. -
வாரீரோ
- அருட்திரு.
மு. தேவசகாயம்
YouTube Link
No comments:
Post a Comment