வற்றாத நீரூற்று போலிருப்பாய்
வளமிக்க
தோட்டத்தைப் போலிருப்பாய் - 2
கர்த்தரை
நம்பி வாழ்ந்திருப்பாய்
காலமெல்லாம்
நீ செழித்திருப்பாய் - 2
1. வாய்க்கால்கள்
ஓரம்
நடப்பட்ட மரமாய்
எப்போதும்
கனி கொடுப்பாய்
தப்பாமல்
கனி கொடுப்பாய் - 2 - நீ வற்றாத
2. ஓடும்
நதி நீ
பாயும்
இடத்தில்
உயிரெல்லாம்
பிழைத்திடுமே
சுகமாக
வாழ்ந்திடுமே - 2 - நீ வற்றாத
3. பலநாட்டு
மக்கள்
உன்
நிழல் கண்டு
ஓடி
வருவார்கள்
பாடி
மகிழ்வார்கள் - 2 - நீ வற்றாத
4. பஞ்ச
காலத்தில்
உன்
ஆத்துமாவை
திருப்தியாக்கிடுவார்
தினமும்
நடத்திடுவார் - 2 - நீ வற்றாத
5. கோடைக்
காலத்தில்
வறட்சிக்
காலத்தில்
அச்சமின்றி
இருப்பாய் - நீ
ஆறுதலாய்
இருப்பாய் - 2 - நீ வற்றாத
- பெர்க்மான்ஸ்
No comments:
Post a Comment