வழியைக்
கர்த்தருக்குக் கொடுத்துவிடு
அவரையே நம்பியிரு
- 2
காரியத்தை வாய்க்கச் செய்வார்
உன் சார்பில் செயலாற்றுவார் -
2
காத்திரு
பொறுத்திரு கர்த்தரையே நம்பி இரு
காரியத்தை
வாய்க்க செய்வார்
உன்
சார்பில் செயலாற்றுவார் - 2
1. தீயவன் செயல் குறித்து மனம் பதறாதே - (2)
புல்லைப் போல் உலர்ந்து பூவைப் போல் உதிர்ந்து
இல்லாமல் போய்விடும் - 2 - காத்திரு
2. மகிழ்ந்து களிகூரு தொடர்ந்து துதி பாடு -
(2)
உன் இதயத்தின் வாஞ்சை விருப்பங்கள் எல்லாம்
விரைவில் நிறைவேற்றுவார் - 2 - காத்திரு
3. நீதிமான் அனைவருக்கும் வெற்றி உண்டு வெகு
விரைவில் - (2)
துணை நின்று கர்த்தரோ நடத்திச் செல்வார்
துரிதமாய் ஜெயம் தருவார் - 2 - காத்திரு
4. உனது நேர்மையெல்லாம்
அதிகாலை வெளிச்சமாகும் - (2)
நண்பகல் போலாகும் உன் நீதி நியாயம்
நண்பா கலங்காதே - 2 - காத்திரு
5. கோபத்தை விட்டுவிடு சினம் நீ கொள்ளாதே -
(2)
பொறாமை எரிச்சல் ஒரு போதும் வேண்டாம்
அது தீமைக்கு வழி நடத்தும் - 2 - காத்திரு
- பெர்க்மான்ஸ்
No comments:
Post a Comment