யெகோவாயீரே நீர் பார்த்துக் கொள்வீரே
யெகோவாயீரே
நீர் பார்த்துக்
கொள்வீரே
எதற்குமே
நான் பயப்படமாட்டேன்
1. கெர்ச்சிக்கின்ற
சிங்கம் போல் சாத்தான்
வந்தாலும்
உம் நாமத்தினால்
மிதித்து ஜெயித்திடுவேன்
2. நோய் நொடி
வியாதிகள்
வந்திட்டாலும்
உம் சித்தத்தினால்
சுத்தமாகி
சுகமாவேன்
3. கடல் போல்
கடன் நஷ்டம் வந்திட்டாலும்
ஆபிரகாமைப்
போல சீமானாவேன்
4. சோதனை வேதனை
வந்திட்டாலும்
ஜெயித்து
விசுவாச வீரராவேன்
5. துன்ப துக்க
துயரம் வந்திட்டாலும்
துதித்தே
நான் ஜெயித்திடுவேன்
6. குடும்பத்தில்
பிரச்சனை வந்திட்டாலும்
குரு இயேசுவே
நீர் வெற்றி தருகிறீர்
7. அநீதி வஞ்சனை
வந்திட்டாலும்
ஆண்டவரே
எனக்காய் யுத்தம்
பண்ணுவீர்
Comments
Post a Comment