125. இராகம்: காம்போதி ஆதிதாளம் (419)
பல்லவி
வருவார் கிறிஸ்தேசு
நாதர்தான்; அன்று
தருவார் அவரவர்
பலன்தான் மெய்யாய்
அனுபல்லவி
குருவாய், இரட்சிப்பின்
அதிபதியாம், - யூதக்
கோத்திர மனுச் சக்கரவர்த்தியாய்,
மெய்யாய் - வரு
சரணங்கள்
1. பொய்யில்லை; அதி
சீக்கிரத்தில்தான்,-அவர்
புண்ணியர் மறுரூபமாகத்தான்,
துய்யோரெழுப்பி
யொன்றாய்ச் சேரத்தான், உலகின்
துர்ச்சனரின்[1] கண்களும்
காணத்தான், மெய்யாய் - வரு
2. ஜெயங்கொள்ளுந்
தாசனைக் கண்டெடுக்க, தமது
சிம்மாசனம்
அவனுக்குக் கொடுக்க;
பயங்கொள்ள உலகைக்
கோலாலொடுக்க, தமது
பாதரட்சை அவன் காலில் தொடுக்க, மெய்யாய்
- வரு
3. உலகமுழுது மொன்றாயாள, சபை
யொரு மந்தையாய்க் கூடி வாழ,
அலகை[2] நரகில் வீழ்ந்து மாள, மூவுல
கனைத்தும் வணங்கியபடி
தொழவே, மெய்யாய் - வரு
4. பசிதாகம், துக்கம்
பறந்தோட, வென்ற
பரிசுத்தர் புதுப்பாட்டுப் பாட,
வசித்த துட்டர்[3] நரகில் வாட, இங்கே
வறுமைப் பட்டோர்
சுகங்கொண்டாட, மெய்யாய் - வரு
- ஜே.சி.
அருளப்பன்
No comments:
Post a Comment