வரம் கேட்டு வருகின்றேன் இறைவா
வரம் கேட்டு வருகின்றேன் இறைவா - என்
குரல் கேட்டு அருளாயோ தலைவா - 2
1. பகை சூழும் இதயத்தின் சுவரை யெல்லாம் - என்
பாசத்தால் தகர்க்கின்ற வரம் கேட்கின்றேன்
- 2
புகை சூழ்ந்து இருள் வாழும் மனதில் எல்லாம் - உன்
பெயர் சொல்லி ஒளியேற்ற உனைக் கேட்கின்றேன்
- வரம் கேட்டு
2. நலமெல்லாம் எனக்கென்று தேடும் குணம் - இனி
நாள்தோறும் இறக்கின்ற வரம் கேட்கின்றேன்
- 2
பலியாகப் பிறர்க்கென்னை அளித்திட்ட பின் - என்
பரிசாக உனைக் கேட்கும் வரம் கேட்கின்றேன்
- வரம் கேட்டு
YouTube Link
Comments
Post a Comment