வந்தேன் கல்வாரி சிலுவையினருகே
406.
இராகம்: உசேனி ஆதி
தாளம்
பல்லவி
வந்தேன் கல்வாரி சிலுவையினருகே-எனைத்
தந்தேன் எனக்காய்ப் பிணை நின்றவனே.
சரணங்கள்
1. உந்தன்
திருமகிமை திறமதையும்-விட்டு
ஓடி
உலகில் வந்த விதமதையும்
எந்தன்
பாவப் பாரத்தை மனசுடனே-சாமி
ஏற்றுக்கொண்டென்னை மீட்ட விதமதையும்-கண்டு
- வந்
2. ஐயோ!
பாவத்தின் பலன் பயங்கரமே-அது
ஆகாதென்றதனை விட்டடுத்து வந்தேன்
மெய்யாய்
அடியனுக்காய்ப் பிழைப்பேன்-உந்தன்
மீதாசை வைத்து தினம் சுகித்திருப்பேன்-சாமி - வந்
- ஜோசப்
ஜோயல்சிங்
Comments
Post a Comment