வந்தவ ராரையா யிங்கே

வந்தவர் ஆரையா இங்கே வந்தவர் ஆரையா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

26.         செஞ்சுருட்டி                                                                     ஆதி தாளம்

 

                             பல்லவி

 

                             வந்தவ ராரையா யிங்கே

                             வந்தவர் ஆரையா

 

                             அனுபல்லவி

 

                        சுந்தரப் பரன் சொரூபமாய் - பரி

                        சுத்தமோடு பெத்தலையிலுற்ற குடிலுக் குள்ளே - வந்

 

                             சரணங்கள்

 

1.         தேவனும் மனிதனுமாய் - தஞ்

            சிந்தையில் மகிழ்ந்து மாட்டு

            விந்தைத் தொழுவத்தினிலே - வந்

 

2.         தூதர்க ளதிபதியே - தீர்க்கர்

            சொன்னபடி யுன்னதமாய்

            முன்னணையிலே படுக்க - வந்

 

3.         வானவரடி தொழவே வெல்லை

            மந்தையாவின் பந்தி யூடு

            கந்தைத் துணியைப் போர்த்து. - வந்

 

4.         மாதனை மரியிடமே சுய

            வல்லமை சற்றில்லவர் போற்

            புல்லினிற் கிடத்தி வைக்க. - வந்

 

5.         ஆயர்கள் கூடி வரவொரு

            அன்னை மரி தன்னிடத்திற்

            சின்னவடி வெடுத்து. - வந்

 

6.         இயேசுக் கிறிஸ்தெனவே - யுலக

            இரட்சகர் நந்தட் சகரென்

            றுச்சித நாமத்தைக் கொண்டு - வந்

 

7.         அற்புத வதிசயமோ பர

            னாட்டுக் குட்டிப் போலிருக்குது

            மாட்டுக் கொட்டிலுக் குள்ளே. - வந்

 

 

 

 

4.         பராபனொரு மகனோ - கெட்ட

            பாவிகளை ஆவலுடன் பூவிலெங்கும் தேடிக்கொண்டு - வந்தவர்

 

4.         பரனுக்கும் மனிதனுக்கும் - பிணைப்

            பட்டு நடுப்பட்டு வினைப்பட்டுப் பரிதபிக்க - வந்தவர்

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே