வந்தருள் ஈசன் மனை காண்
10. இராகம்: புன்னாகவராளி ரூபக சாப்புதாளம்
(376)
பல்லவி
வந்தருள், ஈசன் மனை காண்;மகிமை ஏகோவாவே, உனை
வாழ்த்தும்
அடியார்க்கு நிதம் வாய்த்த பெருவாழ்வே.
அனுபல்லவி
அந்தி பகல் இங்குனை
வந்தடையும் அடியார்க் கிரங்கி,
ஆதரவாய் ஆண்டு கொள்வாய், வேத
பராபரன் குமாரா - வந்த
சரணங்கள்
1. திருக்கருணை மொழியால் மனந்திருக்கறுக்கும் பொருட்டெழுந்து,
தீய வினை மிதித்
தழிப்பாய், தேவா பெருமானே
பெருக்கமுள
உன் வசனம் பேதையருக்கே பலிக்க
உருக்கமுடன்
இரங்கும் ஐயா, உன் பதமே தஞ்சம் என்றாம்;
- வந்த
2. பஞ்சம் படை, நோவு, துன்பம், பயங்கரம், செய்
பவ வினைக்கும்,
கெஞ்சும் அடியாரைக்
காப்பாய், கிறிஸ்தேசு நாதா,
மஞ்சு திகழ்
பரமண்டல வாழ்வை விடுத்தே உலகில்
துஞ்சு சிறு
பாலகனாகத் தோன்றி வரும் தேவ தேவே
- வந்த
3. பூவுலகை ஆளும்
மன்னர், போதம் உணர் வேதியர் உன்
பொன் பதத்தை
அர்ச்சயிக்க நல பதம் தா, தேவே
மூவுலகினில்
துதியும், முக்யம் மகத்துவம் கனமும்,
மா பலமுமே உமக்கே,
மங்களம் உண்டாவதாக - வந்த
- காபிரியேல் உபதேசியார்
Comments
Post a Comment