வந்தாளும் இயேசுவே வாருமிதில்
வந்தாளும்
இயேசுவே வாருமிதில்
தேவ மைந்தர்கள் கூடு மிந்நேரமதில்
1. பத்மூ தீவில் பரிசுத்த நாளில் வந்த வண்ணமே
சத்துருக்கள்
கூட்டமெல்லாம் சக்தியற்றுச் சோரவே
இத் தினத்தில் இங்கு வந்திடும் - தேவா
- வந்தாளும்
2. நல் வழியை நாடிடாமல் ஓடும் நரர் யாவர்க்கும்
கல்வாரியின் அன்பை இன்று கர்த்தனே நீர்
காட்டியே
நற்குணம் அவர்க்கு நல்கிடும் - தேவா -
வந்தாளும்
3. சக்தியில்லை எங்களுக்குச் சாம்பலும் தூசியும்
கர்த்தனே கருணை கூர்ந்து தந்திடும் சர்வாயுதம்
புத்தியாக யுத்தம் செய்திட - தேவா - வந்தாளும்
4. என்னை நோக்கி கூப்பிடில் அளித்திடுவேன் உத்திரம்
பின்னும் நீ அறிந்திடா வல்லமைகள் காட்டுவேன்
என்றவா இந்நேரம் வாருமேன் - தேவா - வந்தாளும்
5. சதா காலங்களிலும் இருப்பேனுங்கள் கூடவே
சத்துருவின் வல்லமைகள் ஒன்றும் மேற்க்கொள்ளாதென்றீர்
ஆதலால் அனந்தம் ஸ்தோத்திரம் - தேவா - வந்தாளும்
YouTube Link
Comments
Post a Comment