வந்தாரே ஆவி சீஷர்கள் மேலே
140. இராகம்: நாதநாமக்கிரியை ஆதிதாளம்
பல்லவி
வந்தாரே ஆவி;சீஷர்கள் மேலே
வந்தாரே
ஆவி
அனுபல்லவி
வந்தனர், அக்கினிச் சுந்தர நாவென
நிந்தை அடைந்துளம்
நொந்தவர் மேலே! - வந்
சரணங்கள்
1. எல்லாரும் ஒருமனம்
அல்லாது, வேறில்லாமல்,
சொல்லாமல் வீடுவிட்டு,
புல்லர்கள்[1] தமக்கஞ்சி,
வல்லவனான ஏசு
நல் அடியை வணங்கி
அல்லும் பகலும் ஏற்றும் மெல்லிய சீஷர்
மேலே - வந்
2. அண்டம் அகன்று, பூ மண்டலந்தனில்
ஆவி
எண்டிசையும்
முழக்கம் கொண்டிடவே, பலத்த
சண்டமாருதம்[2] போலக்
கண்டவர் பிரமிக்க
தொண்டர் இருந்த வீட்டை மண்டல்செய்து நிரப்பி - வந்
3. கூடிய ஜனங்களும் நாடி-கலிலேயர்
தேடிப் பிடிக்கினும்
ஓடி ஒளிப்பவர்
பாடி, எம்பாஷையிலே
நீடிய பிரசங்கம்
சூடியதேதென,
சாடி அதிசயிக்க - வந்
- ஆபிரகாம்
உபதேசியார்
Comments
Post a Comment