வந்தானே தந்தை பிதாவின் சுந்தர மைந்தனே
124. இராகம்: காப்பி ஆதி
தாளம்
பல்லவி
வந்தானே,
தந்தை பிதாவின் சுந்தர மைந்தனே,
அனுபல்லவி
அந்தமாய்[1] உருவம்கொண்டு, அன்புடன் சீயோனைக் கண்டு
விந்தையில் சல்லாபம்[2] விண்டு, மீண்டிரட்சித்தாளவென்று - வந்
சரணங்கள்
1. அங்கியும் மார்பருகில்
பொற்கச்சையும் கட்டி
அட்சய[3] தேவ
த்ரவிய ஆரணம்[4] கிட்டி,
துங்கமாய்க்[5] கரத்தில்
வான ராச்சிய செய்கோலை நீட்டி,
ஜோதிப் பிரகாச ஜீவ ரத்ன கிரீடம் சூட்டி - வந்
2. அக்கினி கொழுந்தடைவாய்க்
கண்கள் எரிக்க
ஆதித்தன்[6] எனவே
மக ப்ரபை விரிக்க,
மிக்க சிரத்தின்
ரோமம் பஞ்சினும் வெண்மை தெரிக்க,
மேன்மையில் எக்காளங்
கொண்டேழு தூதர் ஆர்ப்பரிக்க, - வந்
3. காயும் சொகு சாவுக் கொத்த கால்கள் இலங்க,
கரத்தினிலே
ஏழு நட்சத்திரங்கள் அலங்க[7]
வாயிலிருந்
திருபுறமும் கூர்மைப்பட்டயம்
துலங்க,
வாரிதி[8] ஜலத் தொனியின் வார்த்தையால் அண்டம்
குலுங்க - வந்
- வேதநாயக
சாஸ்திரியார்
Comments
Post a Comment