வல்ல
ஆவியே வாரும் ஆவியே
வல்லமையால் நிரப்பிடுமே
வல்ல ஆவியே வாரும் ஆவியே
வந்தோர்க்கு
வாழ்வு கொடுத்திடுமே
1. பெந்தேகோஸ்தே நாளின்
நிறைவினிலே
அக்கினியாக
இறங்கினீரே
பெலவீனரான யாவரையும்
பெலவானாக மாற்றிடுமே
2. மாம்சத்தின் கிரியைகள் மறைந்திடவே
மகிமையின் சாயல் தரித்திடவே
மறுரூபமாக பறந்திடவே
மணவாளனோடு சேர்ந்திடவே
3. உந்தன் ஆவிக்கு காத்திருக்கும்
உம் அடியார் மேல் ஊற்றிடுமே
உம் வல்ல வரங்கள் ஒன்பதையும்
உம் அடியேனுக்கு ஈந்திடுமே
No comments:
Post a Comment