124. பியாகு ஆதி தாளம் (105)
பல்லவி
அந்தோ காண்கிறேன் எனதருமை ரட்சகர் சமுக சன்னிதி
ஆ!
பார் போவோம் வா வா நேசா
1. சுந்தரசீலமும் சுகந்த வாசமும் இந்திர நீலமும்
இதர கோலமும், கலந்த காட்சி கலந்த காட்சி - அந்தோ
2. கேரூபின் கூடுது சேராபீன் பாடுது பேரோசையோடு
பேரோசையாகுது, சிறந்தகாட்சி சிறந்த காட்சி
- அந்தோ
3. பன்னிருவாசலும் பளிங்கு வீதியும் மின்னொளி
கற்களும்
மூப்பர் சூழ்தலும், என்னபகட்டு, என்னபகட்டு
- அந்தோ
4. இரத்தச் சாட்சிகளும் நன்முனிவர்களும் சுத்தர்கள்
தீர்க்கரும்
தூயசீடரும், பந்தி பந்தியாய், பந்தி பந்தியாய்
- அந்தோ
No comments:
Post a Comment