அந்தோ காண்கிறேன் எனதருமை ரட்சகர் சமுக சன்னிதி


124. பியாகு         ஆதி தாளம்  (105)

பல்லவி

          அந்தோ காண்கிறேன் எனதருமை ரட்சகர் சமுக சன்னிதி
            ஆ! பார் போவோம் வா வா நேசா

1.         சுந்தரசீலமும் சுகந்த வாசமும் இந்திர நீலமும்
            இதர கோலமும், கலந்த காட்சி கலந்த காட்சி             - அந்தோ

2.         கேரூபின் கூடுது சேராபீன் பாடுது பேரோசையோடு
            பேரோசையாகுது, சிறந்தகாட்சி சிறந்த காட்சி            - அந்தோ

3.         பன்னிருவாசலும் பளிங்கு வீதியும் மின்னொளி கற்களும்
            மூப்பர் சூழ்தலும், என்னபகட்டு, என்னபகட்டு                - அந்தோ

4.         இரத்தச் சாட்சிகளும் நன்முனிவர்களும் சுத்தர்கள் தீர்க்கரும்
            தூயசீடரும், பந்தி பந்தியாய், பந்தி பந்தியாய்                - அந்தோ

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே