சிலுவைதனில் உயிர் பிரிய திருமகனார் முகநோக்கி


75.                                                                              (60)

7-ஆம் வார்த்தை

ஒப்பாரி

1.       சிலுவைதனில் உயிர் பிரிய திருமகனார் முகநோக்கி
            தேவ அன்னையும் கூவி அழுதாள் - வெகுவாய்

2.         உலகமதிலிருசோரர் நடுவாக மரமீதில்
            உறங்குவதும் சுகமாச்சுதோ - மகனே, மகனே

3.         ஐயாயிரர் பசியை அமர்த்தி அரவணைத்த
            அருட்கை அயர்ந்து சோர்ந்ததுவோ - மகனே, மகனே

4.         பல பல பேரவமாக சரசமோடு தாராட்ட
            பாங்குதனில் நித்திரையானீரோ - மகனே, மகனே

5.         சங்கிலி துரட்டி கசைவார்முள் பிரம்படியால்
            சரீர பெலவீனமானீரோ - மகனே, மகனே

6.         ஆங்குமுன் சொற்படி சோர்வை எல்லாம் திரண்டு
            அம்புவியில் வெம்பினேனே - மகனே, மகனே

7.         காவைதனிலே யேவைகனிதின்ற பாவமதால்
            காடியோ குடித்தீரையா - மகனே, மகனே

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு