நாசலோக மீதிலே வாசஞ்செய் புறாவண்ணமே


123. செஞ்சுருட்டி              ஏக தாளம்  (104)

                   நாசலோக மீதிலே வாசஞ்செய் புறாவண்ணமே
                        ஏசுநேசர் உன்னைத் தேடுகிறார் - அதி ரூபியே
                        என்னோடே எழுந்துவா ஓடி நடந்துவாவே

1.         வாசலிலே நிற்கிறார் பாசமாயழைக்கிறார்
            நாசமில்லா லோகமதற்கு                      - அதி ரூபியே

2.         பரமண்டலம் சேரலாம் சுரமண்டலம் பாடலாம்
            தரைமண்டலத்துள்ள நேசரே                - அதி ரூபியே

3.         தங்கரூபமாகலாம் அவர் தங்கள் ரூபமாகலாம்
            மங்களங்கள் பாடலாமே                        - அதி ரூபியே

4.         வெண் துயிலுடுப்போம் வெண்கொடி பிடிப்போம்
            கண்திறந்து பார்க்கமாட்டாயோ            - அதி ரூபியே

5.         மேகமீதிலோடுவோம் சங்கீதமாகப் பாடுவோம்
            தாகமல்லையோ அதின்மேலே              - அதி ரூபியே

6.         ஜீவகிரீடம் தரிப்போம் நித்ய ஜீவனோடே யிருப்போம்
            ஜீவவாக்கு உரைக்கவில்லையோ         - அதி ரூபியே

7.         ஞானமணவாளனின் கலியாண விருந்துண்ணலாம்
            வானவரின் கூட்டம் கூடலாம்              - அதி ரூபியே

8.         ஜீவமன்னா புசிப்போம் ஜீவதண்ணீர் குடிப்போம்
            சாபமெல்லாம் தொலைக்கப் போறாரே    - அதி ரூபியே

9.         தங்கரத்தினக் கோட்டைகள் சிங்காரமான ஆலயம்
            மங்காமல் துலங்குது பார்                       - அதி ரூபியே

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு