இன்னம் நீ என்ன செய்கிறாய்


127. முகாசி             ஆதி தாளம்   (107)

பல்லவி

                   இன்னம் நீ என்ன செய்கிறாய்
                   குணப்படாமல், தாமதமென்ன - ஓ பாவி

1.         உன்னதத்திருந்த இயேசு இந்நிலத் தவதரித்து
            உன்னை மீட்க வந்தாரல்லவா - ஓ பாவி

2.         அண்டபகிரண்டந்தனை ஆளுகின்ற வல்லசுதன்
            தொண்டருக்காக மரித்தாரே - ஓ பாவி

3.         வல்லபிதா தம்மகனை உள்ளத்தில் நினைப்பவர்க்க
            சொல்லரும் பதவி ஈவாரே - ஓ மனமே

4.         சிங்கம்போலவே பிசாசு அங்குமிங்கு முன்னைச்சுற்றி   
            பங்கப்படுத்தப் பார்க்குதே - ஓ மனமே

5.         வல்ல பஞ்சபட்டயமும் கொள்ளை நோயு முன்னுடைய
            வல இடபக்கம் செல்லுதே - ஓ மனமே

6.         தோழர்கள் தூஷிப்பாரென்று தூரமாக நில்லாதே
            ஆவலோடெழுந்து வாராயோ - ரட்சிப்படைய

7.         ரட்சண்ணிய செய்திகொண்டு தேவதாசர் வந்து நின்று
            ஓதுவார்கள் நீதியைத்தானே - ஓ பாவி

8.         ஒவ்வொரு நாளும் உன் காதில் ரட்சிப்பின் தொனி தொனிக்க
            இன்னமும் நீ தாமதிப்பதேன் - ஓ பாவி

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு