அருளின் மாமழை பெய்யும் என்று வாக்களித்தோரே


155.  இராகம் (அருள் ஏராளமாய் பெய்யும்)     (180)

 

1.       அருளின் மாமழை பெய்யும் என்று வாக்களித்தோரே

            மாரியாய் பெய்திடச் செய்யும் லோகத்தின் ரட்சகரே

பல்லவி

            தேவன்பின் வெள்ளம் தேவன்பின் வெள்ளம் தேவை
            கொஞ்சம் ருசித்த என் உள்ளம் கெஞ்சுதே இன்னும் தேவை

2.         கற்பாறைபோல் பாவி உள்ளம் கடினப்பட்டதையோ
            பரிசுத்தாவியின் வெள்ளம் கரைக்க வல்லதையோ       

3.         வெட்டாந்தரை நிலம் தானும் ஏதேன்போல் மாறுமென்றீர்
            சாபத்துள்ளான முற்பூண்டும் கேதுருவாகுமென்றீர்

4.         தேசத்தின் இருளைப்பாரும் லோகத்தின் மெய்த்தீபமே
            ஆவியின் அருளைத்தாரும் மனமாற்ற வல்லவரே

5.         சபையின் குறைகள் யாவும் தீர்த்திடும் வல்லவரே
            யுத்தத்தில் முன்செல்ல ஏவும் எங்கள் தளகர்த்தரே        

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு