உலகையோர் நிலை என்றெண்ணாதே - க்ஷணம்


151.  இராகம் (காலமே தேவனைத் தேடு)                                             (124)
மோகனம்                                                                    ரூபக தாளம்

பல்லவி

          உலகையோர் நிலை என்றெண்ணாதே - க்ஷணம்
          ஒழிந்துபோம் உன்னோடோரடியும் வராதே

அனுபல்லவி
            பலமாக பொக்கிஷம் பரத்திலே நாடு
            பத்திரமாயங்கு இருக்குதே வீடு

1.         நிலையாது செல்வம் எந்நாளும் - அவை
            நீர் குமிழிகள் போல நிமிஷத்தில் நையும்
            உலையின் மெழுகுபோல் உருகுமே மெய்யும்
            உந்தனின் ஜீவனைப் பிரிக்குமே வீயும்

2.         தீரம், புகழ், கீர்த்தி நாசம் - மற்றும்
            சேயர் மனைவி சிநேகிதர் வேஷம்
            தாரணி முற்றுமே தவிர்த்திடு மோசம்
            சார்ந்திடில் ஆன்மாவுக்கென்றுமே தோஷம்

3.         வானத்தின் கீழ் யாவும் பண்டு - சால்மோன்
            மாயை என்றுரைத்ததை மறவாதே கண்டு
            தானத்தோ டேசுவைத் தப்பாமல் அண்டு
            சாலோக நித்திய பேரின்பமுண்டு.


Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு