விடுவேனோ நான் உம்மை விடுவேனோ


160.           (188)

பல்லவி

                   விடுவேனோ நான் உம்மை விடுவேனோ

1.         ஆசீர்வதிப்பேனென்று ஆணையிட்டீரே துரையே
            ஆசீர்வதித்த எந்தன் ஆசா நேசா பாசா உம்மை         - விடுவேனோ

2.         பாவியான எந்தனுக்காய் பாடுபட்டீரே துரையே
            பங்கில்லையோ உம்மிடத்தில் பட்சமாய் என்முகம் பாராய்          - விடுவேனோ

3.         பங்குதர மாட்டேனென்றால் பட்டபாடு வீணாகுமே
            பார்த்திபனே உம்மை ஒருக்காலும் விடமாட்டேனையா - விடுவேனோ

4.         என் பாவம் பொறுக்காவிட்டால் ஏன் தானையா பாடுபட்டீர்
            உந்தன் பாட்டாலென்ன பயன் உண்டு அதைச் சொல்லுமையா  - விடுவேனோ

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு