பாவநாசகரேசு பாடுபட்டுயிர்த்தார்


86.  இராகம் 
(ஜிவநாயகரிதோ சிசுவாக)                      (71)

பல்லவி

          பாவநாசகரேசு பாடுபட்டுயிர்த்தார்
          பாதாளம் விட்டேறி பரத்துக்கேகிட

அனுபல்லவி

            தேவசமுகம் கண்டு சிறப்பாய் வீற்றிட

1.         பாவிகளுக்காக பரனிடத்திலே பரிந்துபேசி பாக்யம் பகிர்ந்தளிக்கவே
            விரைந்துவாரும் போவோம் விமலனைப் பார்க்க            - பாவ

2.         எல்லாம் ஜெயங்கொண்ட ஏகசக்ராதிபதி
            நல்லார் மனதைத் தேற்ற நாதன் உயிர்த்தாரே
            பொல்லாங்கோனை மீட்கப் பொறுமையாயிருந்து           - பாவ

3.         மண்ணிலிருந்தெழுந்து விண்ணுக்குச்செல்ல
            மகிமையான தேவன் ஜெயமாக உயிர்த்தார்
            ஆ என் நேசா நீயும் ஆயத்தமாகு                                  - பாவ

4.         சாவின் பள்ளத்தாக்கைத் தாமாக ஜெயித்து
            பேயின் தலையை வென்ற பிதாசுதன் உயிர்த்தார்
            பூவின் மனுடோர்க் கெல்லாம் புண்யமளித்திட               - பாவ

5.         வானமண்டல வீட்டின் லோகத்திற்கு வர
            கோனான் ஏசுராஜன் ஆயத்தமாகிறார்
            அதால் நேசா நீயும் ஆயத்தமாகாயோ                           - பாவ

6.         அதோ பார்க்கும் யாரும் பயந்து நடுங்கிட
            இதோ சீக்கிரம் ஏசு வருவேன் என்கிறார்
            அதால் பாவி அவர் அருகில் ஓடிவா                             - பா

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு