பாவஞ் செய்யாதே நீ பாவஞ் செய்யாதே


133. இராகம் சங்கராபரணம்             (133)

பல்லவி

                   பாவஞ் செய்யாதே நீ பாவஞ் செய்யாதே
                        பாவஞ் செய்யாதே நீ பாவஞ் செய்யாதே

1.         தேவன் சொன்ன கற்பனை மீறித் தீமை செய்யாதே
            காவல் நின்று பார்ப்பாரென்று கருத்தாய் மனதில் நினைத்தே இரு நீ

2.         பெற்ற தாலந்துக்களை நீ பேணாமற் போனால்
            குற்றவாளி என்றே தேவன் கோபங்கொள்வார் லாபம் பண்ணு

3.         நித்தம் நித்தம் நீ புரிந்த நின் பாவமெல்லாம்
            கர்த்தரெழுதி வைத்திருக்கும் கணக்கில்

4.         எப்பொழுது சாவு வரும் என்றறியாயோ - அதால்
            இப்பொழுது நீ திரும்பி இயேசுமேசியாவை நம்பு


Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு