வந்தாளுமே எந்நாளுமே, உன் நாமமே என் தாபமே


156.  காப்பி    ஆதி தாளம் (184)

 

1.       வந்தாளுமே எந்நாளுமே, உன் நாமமே என் தாபமே

            இந்நேரமே கண்பாருமே

2.         தேவாவியே வரந்தாரும், இப்பாவியின் பாவம் தீரும்
            உம் ஜோதியின் ஒளி வீச

3.         சத்துருக்கள் சதிசெய்ய நித்தம் என்னை நெருக்கிறார்
            அத்தன் நீர் தான் அடைக்கலம்

4.         இப்பாரிலே நின் பேரையும் தப்பாமலே யான் பாடியே
            எப்போதுமே கொண்டாடுவேன்

5.         என்மேசையா உன் ஆசையைக்கொண்டோசையாய் நான்பேசவே
            நின்னாசி தா நன் நேசமாய்

6.         நாதனுன்னை என்நேரமும் ஓதும் ஏழைப்பாவியேனை
            ஆதரித்தே ஆண்டருள்வாய்    - வந்தாளுமே

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு