கல்வாரி மலையோரம் வாரும் பாவம் தீரும் - ஜோதி


77. செஞ்சுருட்டி         ரூபக சாப்புத்தாளம் (62)

பல்லவி

                   கல்வாரி மலையோரம் வாரும் பாவம் தீரும் - ஜோதி

அனுபல்லவி

            செல்வராயன் கிறிஸ்து தியாகேசன் தொங்கினாரே         - ஜோதி

சரணங்கள்

1.        லோகத்தின் பாவமெல்லாம் ஏகமாய்த் திரண்டு
           நொம்பலப்பட வைக்க ஐயன் மேலுருண்டு
           தாகத்தினால் வாடிக்கருகியே சுருண்டு
           சடலமெல்லாம் உதிரப்பிரளயம் புரண்டு
           சாகின்றாரே நமது நாதா ஜீவநாதா                               - ஜோதி

2.        பொன்முடி மன்னனுக்கு முண்முடியாச்சே
           உபகாரம் பரிகாரம் சிதையவுமாச்சே
           விண்ணிலுலாவும் பாதம் புண்ணாகலாச்சே
           மேனியெல்லாம் வீங்கி விதனிக்கலாச்சே
           மேசையனப்பன் கோபம் மேலே இதற்குமேலே                 - ஜோதி

3.        மலர்ந்த சுந்தரக் கண்கள் மயங்கவுமேனோ
           மதுரிக்கும் திருநாவு வறண்டது மேனோ
           தளர்ந்திடாத கரங்கள் துவண்டதுமேனோ
           ஜலத்தில் நடந்த பாதம் சவண்டதுமேனோ
           சண்டாளர் நம்மால்தானே நம்மால்தானே                      - ஜோதி

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு