ஆசீர்வாதம் வேணும் ஆவியான ஜீவ தேவ


157.  செஞ்சுருட்டி     ஆதி தாளம் (185)
இராகம் (ஏசுநேசா வாரும்)

பல்லவி

          ஆசீர்வாதம் வேணும் ஆவியான ஜீவ தேவ
         
1.         தேசிக மேலோகமதில் தேவதிருப்பாதமதில்
            செல்ல வல்ல வெல்ல நல்ல                    - ஆசீர்வாதம்

2.         கண்மணிபோலன்புடனே காண்பி தயை நண்புடனே
            காவா மூவா தேவா வாவா                     - ஆசீர்வாதம்

3.         அத்தனுனின் பாடுகளை அன்புடனே சிந்தை செய்ய
            ஆசையுள்ள ஆவல்கொள்ள                 - ஆசீர்வாதம்

4.         பன்னிரண்டு சீஷருக்கும் பரிசுத்தாவி கொடுத்த தேவா
            பத்தா கர்த்தா நித்தா வாவா                - ஆசீர்வாதம்

5.         ஆலயந்தனிலுமது வசனமதைப் போதிக்கின்ற
            போதகர் அனைவருக்கும்                     - ஆசீர்வாதம்

6.         பத்தமுடன் கூடி சுவிசேடமலர் சூடிக்கவி
            பாட ஆட தேட நாட                            - ஆசீர்வாதம்

7.         பூரண விசுவாச ஜெபம் பூததயை தியான தவம்
            புரிய அரிய வரிய பெரிய                        - ஆசீர்வாதம்

8.         தாதாவே தாள் பணியும் தானடியேன் ஞானமணி
            தாசனுக்கு சீஷருக்க                            - ஆசீர்வாதம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு