157. செஞ்சுருட்டி ஆதி தாளம் (185)
இராகம் (ஏசுநேசா வாரும்)
பல்லவி
ஆசீர்வாதம்
வேணும் ஆவியான ஜீவ தேவ
1. தேசிக
மேலோகமதில் தேவதிருப்பாதமதில்
செல்ல
வல்ல வெல்ல நல்ல
-
ஆசீர்வாதம் வேணும்
2. கண்மணிபோலன்புடனே
காண்பி தயை நண்புடனே
காவா
மூவா தேவா வாவா
-
ஆசீர்வாதம் வேணும்
3. அத்தனுனின்
பாடுகளை அன்புடனே சிந்தை செய்ய
ஆசையுள்ள
ஆவல்கொள்ள
-
ஆசீர்வாதம் வேணும்
4. பன்னிரண்டு
சீஷருக்கும் பரிசுத்தாவி கொடுத்த தேவா
பத்தா
கர்த்தா நித்தா வாவா
-
ஆசீர்வாதம் வேணும்
5. ஆலயந்தனிலுமது
வசனமதைப் போதிக்கின்ற
போதகர்
அனைவருக்கும்
-
ஆசீர்வாதம் வேணும்
6. பத்தமுடன்
கூடி சுவிசேடமலர் சூடிக்கவி
பாட
ஆட தேட நாட
-
ஆசீர்வாதம் வேணும்
7. பூரண
விசுவாச ஜெபம் பூததயை தியான தவம்
புரிய
அரிய வரிய பெரிய
-
ஆசீர்வாதம் வேணும்
8. தாதாவே
தாள் பணியும் தானடியேன் ஞானமணி
தாசனுக்கு
சீஷருக்க
-
ஆசீர்வாதம் வேணும்
No comments:
Post a Comment