தற்பரனே எனது மேய்ப்பர் தாழ்ச்சியை நானடையேன்


170.

பல்லவி

                   தற்பரனே எனது மேய்ப்பர் தாழ்ச்சியை நானடையேன்

அனுபல்லவி

                        மெய்ப்பரன் புல் தரையில் என்னை மேய்த்துக் காப்பாரே - மகா

1.         ஊற்றின் சுத்த தண்ணீரண்டை சேர்த்திடுவாரே - என
            தாத்துமத்தின் தாகமெல்லாம் அமரச் செய்வாரே

2.         தம்நாம நிமித்தமெனில் தயவுவைப்பாரே - வெகு
            செம்மையுள்ள வழியிலென்கால் செல்லச்செய்வாரே

3.         மரணநிழல் பள்ளத்தில் நான் வழி நடந்தாலும் - என்னை
            பரன் காப்பார் மோசத்துக்கு பயப்பட்டஞ்சேனே

4.         எனது துணையாகவிருந்தென்னைக் காப்பாரே - ஆமாம்
            தமது தண்டக்கோலாலென்னைத் தாங்கியாற்றுவாரே

5.         என் தலையிலபிஷேக மிதமாய் செய்தாரே - எனின்
            சந்தோஷபாத்திரம் நிரப்பி சௌக்கியம் பெற்றேனே

6.         தேவ நம்மை கிருபையென்றசெல்வ பாக்கியங்கள் - எந்தன்
            ஜீவனுள்ள நாளிலெல்லாம் சேர்த்துச் செல்லுவாரே

7.         கர்த்தருட நல்வீட்டில் காதலுடனே - நான்
            நித்த நித்த காலமெல்லாம் நிலைத்திருப்பேனே

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு