19 May 2018

வாரீரோ சுகந்தமிட மகிமைக் கிறிஸ்துவின்ஜ டலமதை


85.                                                                      (70)

பல்லவி

          வாரீரோ சுகந்தமிட மகிமைக் கிறிஸ்துவின்ஜ டலமதை

அனுபல்லவி

          யாரோ நமக்கென்று திறந்திடுவான்
            சீராய் சுகந்த மீடுவதற்கு

1.         வாரத்தின் முதல்நாள் காலையிலே மரியாள் கல்லறைக் கேகினளே
            கல்லறையை யுற்றுப்பார்க்கையிலே ஏசுவின் ஜடலத்தைக் காணவில்லை

2.         காணாமலழுது கொண்டிருக்கையிலே இரண்டு தேவதூதர் தோன்றினார்
            யாரைத் தேடுகிறீர் என்றுரைத்தார் தேவதூதர்கள் மரியாளிடம்

3.         எங்களேசுவைக் கண்டீரோ என்று மரியாள் பதிலுரைத்தாள்
            ஏசு உயிர்த்தெழுந்தாரென்று தேவதூதரில் ஒருவன் சொன்னான்

4.         இப்படி ஏங்கி நிற்கையிலே இயேசு மரியாளென்றாரே
            இம்மொழி கேட்டமாத்திரத்தில் ரபூனியென்றாள் மரியாளே

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...