என்ன என் ஆனந்தம் என்ன என் ஆனந்தம் சொல்லக் கூடாதே


153.  செஞ்சுருட்டி               ஆதி தாளம்

            என்ன என் ஆனந்தம் என்ன என் ஆனந்தம் சொல்லக் கூடாதே
            மன்னன் கிறிஸ்து என் பாவத்தையெல்லாம் மன்னித்து விட்டாரே

1.         கூடுவோம் ஆடுவோம் பாடுவோம் ஒன்றாய் மகிழ் கொண்டாடுவோம்;
            நாடியே நம்மைத் தேடியே வந்த நாதனைப் போற்றிடுவோம்.

2.         பாவங்கள் சாபங்கள் கோபங்கள் எல்லாம் பரிகரித்தாரே
            தேவாதி தேவன் என் உள்ளத்தில் வந்து தேற்றியே விட்டாரே

3.         அட்சயன் பட்சமாய் ரட்சிப்பை எங்களுக்கருளின தாலே
            நிச்சயம் சுவாமியைப் பற்றியே சாட்சி பகர வேண்டியதே

4.         வெண்ணங்கி பொன் முடி வாத்தியம் மேல் வீடு ஜெயக்கொடியுடனே
            மண்ணுலகில் வந்து விண்ணுலகில் சென்ற மன்னனைத் தோத்தரிப்போம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு