எங்கே நிற்பாய் பாவி - ஓ பாவி


111. இராகம் (சீயோனே மகிழ் மங்கையே)     (262)

பல்லவி

                   எங்கே நிற்பாய் பாவி - ஓ பாவி
                   எங்கே நிற்பாய் பாவி

அனுபல்லவி

                        துங்கன் கிறிஸ்தேசு துரை வரும்போது             - எங்கே

1.         விசித்திரமான நல் விசுவாசி தானே
            ரட்சிக்கப்படுவதும் ரகசியமானால்                                 - எங்கே

2.         திருமொழியால் மனந்திரும்பாத பேரை
            எரிநகரத்தில் அமிழ்த்திடுவாரே                                   - எங்கே

3.         நீதி வஸ்திரம் கட்டி நிற்பவரோடோ
            வேதனை நகரத்தில் வேகுவாரோடோ                          - எங்கே

4.         வஞ்சகமில்லா விஸ்வாசிகளோடோ
            பஞ்சபாதகம் செய்த பாவிகளோடோ                             - எங்கே

5.         ஆராதனை செய்யும் ஆலயத்தோடோ
            சாராயக்கடை தேடும் சந்ததியோடோ                           - எங்கே

6.         கொஞ்சமும் துயரில்லா ரஞ்சகரோடோ
            சஞ்சலப்பட்டு தவிப்பாரோடோ                                      - எங்கே

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு