சொன்னகாலம் ஆச்சுதென்று சுவாமி ஏசுக்கிறிஸ்து


99. செஞ்சுருட்டி                         ஆதிதாளம் (83)

1.       சொன்னகாலம் ஆச்சுதென்று சுவாமி ஏசுக்கிறிஸ்து
            தூதர் திரளோடெழுந்துவாறபோது

2.         செத்தவரெல்லாம் உயிர்க்க ஜீவனுள்ள பேர்களெல்லாம்
            சீக்கிரம் மறுரூப மாகுங்களென்பார்

3.         இரண்டு நினைவாயிருந்து ரண்டகம் செய்தோர்களை
            மண்டை நொறுங்கப் பிடித்துக் கூட்டுமென்பார்

4.         சாபதுவை மீறிவிட்ட சண்டாளப் பாதகரை
            கோபத்தோடே பிடித்துக்கூட்டுமென்பார்

5.         குருத்துரோகம் செய்த கொழுத்த உடல்களையும்
            கூசாமலே பிடித்தக்கூட்டுமென்பார்

6.         குன்றுகளே மலைகளெ இன்றெமை மூடுங்களென்று
            கூக்குரலிட்டே யழுவார் கோடிப்பேர்கள்

7.         தாயாலே கெட்டேனென்பார் வாயாலே கெட்டெனென்பார்
            சத்துருப் பசாசல்லோ கெடுத்தென்பார்

8.         பெண்டாலே கெட்டேனென்பார் கொண்ட கணவனோடு
            பேயாடியும் கெடுத்து பொட்டானென்பார்


Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு