எத்தனையோ காட்சி - சீயோன் நகர்


120.                       தமிழ் இராகம் (101)

பல்லவி

                   எத்தனையோ காட்சி - சீயோன் நகர்
                   எத்தனையோ மாட்சி

அனுபல்லவி

            அத்தனார் வாழும் அபரஞ்சிமேடையும்
            துத்தியங்கள் நீடும் தூதர்கள் வீணையும்
            பக்தியாகப்பாடும் பாவலரோசையும் - எத்தனை

1.         பன்னிரண்டு வாசல் அதோரமாய் பளிங்கு நதியோடுது
            மின்னொளிக்கற்கள்போல - வீதியெல்லாம் மின்னித் திகையுது பார்
            வச்சிரக்கோட்டையும் வர்ணச்சிறப்பான உச்சிதப் பேட்டையும் உத்தமர் பாட்டையும்
            பேச்சுக்கடங்காத பேரின்பக் காட்சியும்
            கண்ணாலே கண்டிடவே என் மானே காதல்கொள்வாய் மெய்யே  - எத்தனை

2.         ஜீவநதியோடுது பளிங்குபோல் சிங்காசனத்தின் முன்னே
            ஜீவ விருட்சமொன்று ஈறாறுவித ஜீவகனியுமுண்டு
            உச்சித தேசத்து ஓங்கு சூரியனும் பச்சுப் பச்சென்னும் பளிங்கு தீபங்களும்
            நிச்சயமாகவே நிலாவும் வேண்டாமங்கே
            மாமனுவேலனங்கே பரஞ்சோதியாய் வீசுகிறார்               - எத்தனை

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு