எப்போது சேருவேனோ! பரம நகர்


115. செஞ்சுருட்டி              ஆதி தாளம் (96)

பல்லவி

                   எப்போது சேருவேனோ! பரம நகர்
                   எப்போது சேருவேனோ?

1.         துப்புரவாம் பளிங்குக் கொப்பான ஜீவநதி
            அப்புக் குளித்துக் களித்துக் சுகித்திருக்க                    - எப்போது

2.         ஆட்டுக்குட்டியின் கலியாண விருந்தருந்தி
            பாட்டுப்படித்துக் களித்து சுகித்திருக்க             - எப்போது

3.         பல்லிசை தாளம் தம்பூர் பஜனை மேளங்களோடு
            அல்லும் பகலும் அல்லேலு அல்லேலு சொல்ல               - எப்போது

4.         தித்திக்கும் தேவாமிர்த ஜீவதருக்கனியை
            தின்று மகிழ்ந்து கனிந்து சுகித்திருக்க                         - எப்போது

5.         துங்காதி துங்கன் சீயோன் மங்கை மணாளர்க்கு
            சங்கீதலங்கிர்த மங்களமும் படிக்க                                - எப்போது

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு