31 May 2018

எருசலேமின் மாதரே கேளீர் வீதிகள் தோறும் கீதசத்தம்


167.  இராகம் (சமயமாம் இரத்தில் யான்)     (269)

          எருசலேமின் மாதரே கேளீர் வீதிகள் தோறும் கீதசத்தம்
            அருமணாளர் ஆத்தும நேசர் இவரே வாறார் அதோ சத்தம்

2.         எழுந்து கூடு எழில் சீயோனின் இளமணாளர் ஏசுவாறார்
            மகிழ்ந்து சூழ்ந்து கொடிகள் தூக்கும் மன்னவர் ராஜ மகிபனார்

3.         இவர் என் சொந்தம் இவர் என் தங்கம் இவர் என் இன்பம் இவரெல்லாம்
            இவரே பள்ளத்தாக்கின் லீலி இவர் நற்பாதம் விடி வெள்ளி

4.         சாரோனின் நல்ல ரோஜாவே ரோஜா நமது மந்தைகளைத் தொகை
            சேரீரோ பார்த்து ஆயிரம் பேரில் மெத்தச் சிறந்த பர்த்தாவே நீர்

5.         மன்னர் சிங்காரம் மாதளத்தோட்டம் மலர்கள் மற்றும் தளதளங்கள்
            வண்மையாய்க்கூவி வாரி இறைப்போம் வாழ்த்தி உரைப்போம் சோபனங்கள்

6.         விருந்து சாலைக்கழைத்துப் போனார், பரமணாளர் கொடி என்மேல்
            பரமணளர் பாதமே அந்த சிறந்தகொடி பாருங்களேன்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...