04 April 2024

குருசில் தொங்கினீரே குருதி

குருசில் தொங்கினீரே குருதி

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   குருசில் தொங்கினீரே

                        குருதி சிந்தினீரே

                        திருக்கரங்கல் ஆணி துளைக்க

                        பெரும் துக்கம் அடைந்தீர்

                        மன்னிபீயும் பிதாவே

                        இந்நிலத்தோர் பிழையை

                        என்ற நல் நாதா

                        எண்ணாமல் செய்த என் பிழையையும் மன்னியும்

 

1.         என்னை நினைத்தருளும்

            நின் ராஜ்யம் வரும்போது

            என்ற கள்வனை

            நீயும் இன்றைக்கே என்னோடிருப்பாய் என்றீர்

            அம்மா அதோ உன் மகன்

            அன்பா அதோ உன் தாயார்

            அந்த உம் அன்னை

            அகம் நிறைய அன்பை அவர்க்காய் தந்தீர்

 

2.         என் தேவனே தேவனே

            நிந்தனை ஏன் செய்திட்டீர்

            என்று சோகமாய் இருக்கிறேனே

            என் நா வறட்சியுற்றேன்

            எல்லாம் முடிந்தபின்னே

            முடிந்ததென்றுரைத்தீர்

            பிரியும் வேளை பிதாவின் கையில்

            பிரியா ஆவி ஈன்றீர்

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...