திக்கற்ற
பிள்ளைகளின் தேவன்
இயேசு
அநாதைகளின்
அடைக்கலம் இயேசு
உன்னை
ஆற்றுவார் தேற்றுவார்
அவரணைப்பார்
அன்பான இயேசு
1. ஏழைகளின்
வழக்கை விசாரிப்பார்
எளியவரின்
கூக்குரலை
கேட்டிடுவார்
நீதியின்
மேலே பசிதாகமுள்ளவரே
நீடிய சாந்தம்
தயவுள்ளவர்
2. யாரும்
உனக்கில்லை யென்று ஏங்குகின்றாயா?
நம்பினவர்கள்
கை விட்டு வாழ்கின்றாயா
அன்னாளின்
ஜெபங்களை
கேட்ட கர்த்தர்
ஆகாரின்
கண்ணீரை துடைத்தவரே
3. நல்ல சமாரியன் இயேசுவே
எண்ணெய்
பூசி காயங்கள்
கட்டுவார்
இரண்டு
பணம் கொடுப்பார்
போஷிப்பார்
உன்னை சபையிலே
சேர்ப்பார் பராமரிப்பார்
No comments:
Post a Comment