நன்றி என்ற வார்த்தை போதவில்லை எனக்கு

நன்றி என்ற வார்த்தை போதவில்லை எனக்கு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                   நன்றி என்ற வார்த்தை போதவில்லை எனக்கு

                        இயேசு தானே வாழ்க்கை என்று ஆகிப் போன பிறகு

                        வாசற்படி முன்னே பாவம் படுத்திருந்தது

                        இயேசு வந்த பின்னே அங்கு நன்மையால் நிரம்புது

                        இயேசய்யா என் இயேசய்யா

                        என் சுவாசமே நீர் தானய்யா

 

1.         தனியே நான் சென்ற நேரத்தில், துஷ்டர் கூட்டம் சூழ்ந்ததே

            எதிர்க்க பெலனே இல்லையே, நிலைகுலைந்து போனேனே

            குற்றுயிராய் கிடந்த என் வாழ்வை அற்பமாய் எண்ணியே

            என் நிலையை கண்டோரும் காணாதது போல் சென்றனர்

            என்னேசு எனக்காக வந்தார்

            காயங்கள் ஆற்றி தேற்ற வந்தார்

            நல்ல சமாரியராய்

 

2.         தொலைந்து நான் போன வேளையில், கலங்கியே தான் போனேனே

            ஓநாய் கூட்டம் நெருங்கவே, அவரில் வைத்தேன் நம்பிக்கை

            நூற்றில் ஒன்றாய் இருப்பினும், என்னை காத்திட துடிப்பவர்

            மீண்டும் என்னை கரத்திலே ஏந்தும் வாஞ்சையை கொண்டவர்

            காணாமல் போன ஆடு நானே

            என் மேய்ப்பர் என்னை தேடி வந்தார்

            தாயுள்ளத்தோடு வந்தார்

 

 

 

https://www.youtube.com/watch?v=KMQd9FweEZQ

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு