தாகம் கொண்டனரே எருசலை
85. இராகம்: யமுனா கல்யாணி. தாளம்: ஆதி.
பரி. கன்னிமரியாள் சுத்திகரிப்புத் திருநாள் - பிப்ருவரி 2ஆம் நாள்
“பாதம் வந்தனமே” - என்ற மெட்டு
பல்லவி
தாகம்
கொண்டனரே
- எருசலை
யாகம்
கண்டனரே
சரணங்கள்
1. வேகமுடனே கன்னிமாதா
விரைந்து சென்றனரே
பாலகனுடனே
தேவாலயமே
- பலியிட - தாகம்
2. பிரதிஷ்ட்டையின்
பெரிய திருநாள்
பிரபல மோங்க
மரியன்னையும்,
மனு மகனும் - தொழுதிட - தாகம்
3. சென்மப் பாவமும்
கன்மப் பாவமும்
சிறிது மில்லாத
சிசுவுடனே,
புறாவுடனே
- பலியிட - தாகம்
4. மாது
மரியாள் தாயும்
அன்னாள் தந்தை
யோயாக்கீம்
மகிழ்ந்திடவே,
களித்திடவே
- துதிசெய -
தாகம்
5. கேன்டில்-மாஸ்-டே,
தோன்றவே ஒளி,கிளம்பி
சொலித்திட
கீர்த்தியுடனே,
பூர்த்தியுடனே
- பலியிட - தாகம்
6. தேட்டமுடை
சீமோன் அன்னாள் தெரிசனம் கண்டார்
சிரம்
பணிந்தார், கரம்
விரித்தார்-துதியுடன்
- தாகம்
7. பிரசவித்தவன்
தோத்திரம் செய்ய,
பிள்ளை களிக்க
பின்னுள்ள
பேர், பின் பற்றவே-பணிவுடன்
- தாகம்
- S. உவால்டர்
கவிராயர்,
தென்மலை.
Comments
Post a Comment