அசாத்தியம் தடைகள் ஆகுமோ இல்லை
கரத்தினால் நிகழ்த்துவார்
பெருங்கடல் விழுங்க கூடுமோ இல்லை
காற்றினை அடக்கி ஆளுவார்
வானாதி வானம் அரசாளும் ராஜன்
பூலோகம் பாடும் பரமனைப் போற்றும்
மலை காடுகள் நதிகள்
கேதுருக்கள் ஆடும்
அவர் நாமம் உயர்ந்ததென்றே
அவர் நாமம் உயர்ந்ததே
1. ஐந்தும் இரண்டும் ஐயாயிரம்
தண்ணீரினால் திராட்சரசமே
மரணம் அதுவோ அவர் வார்த்தையால்
ஜீவனாக பாய்ந்து செல்லும்
தீராததோ இயலாததோ
அவர் பார்வையில் இருந்ததில்லை
ஒரு வார்த்தையே போதுமென்றால்
அது போதுமே செய்து முடிக்க
- Ajay Samuel
No comments:
Post a Comment