திக் கெட்டும் கீதம் தங்க தேவ மகிமை பொங்க
96. இராகம்: துசாவந்தி. தாளம்: ஆதி.
பரிசுத்த மிகாவேல் முதலான சகல தேவ தூதர்களின் திருநாள்
- செப்டம்பர் 29ஆம் நாள்
“இம்மட்டும் சீவன் தந்த” - என்ற மெட்டு
பல்லவி
திக் கெட்டும் கீதம்
தங்க, தேவ மகிமை
பொங்க
செபித்துத்
துதித்திடுவோ
மாக. - திக்
அனுபல்லவி
இக்கட்ட
னைத்துந்தீரும்,
இயேசு சபையே வாரும்
இன்ப தேவாலயம்
அன்புட னேகிடும்
சரணங்கள்
1. மைக்கேல் காபிரி யேலும், வான்
தேவ தூதர்களும்
வந்து
வணங்குந்
திரு நாள் தான்
தக்க
மறை புகலும்,
இரட்சிப்பின்
சுந்தரம்
தங்கு
பவர்களின்
நிமித்தம்
பக்கவூ ழியம் செய்யும்
பணி விடை ஆவிகள்
தாம்
பரம
பிதாவின் முன்
கரங்கள் குவித்துமே
பரலோக
சுரரோடு பாடி
மகிழ்ந் திடும் - திக்
2. மனமது திரும்புற,
ஒரு பாவி யினிமித்தம்
மங்களம்
பாடிடுவர்
வானில்
தினமும்
ஆராதனையில் தேவ
தூதர் வருவார்
ஸ்திரீகள்
முக்காடிட்டுக்
கொள்வீர்
கனமா யோவான்
பிறப்பும், கர்த்தன் பிறப்பும்
சொல்லக்
காபிரி யேல்வர மாபிரி யங்கொள,
கண்டு
சகரியா பண்டு பயந்தனன்
- திக்
3. பராபர வூழியமும்
பாரில் மனுட
ரையும்
பரா
மரிக்க வுதவி செய்வார்
நிரா மய
ரூபமோடு நின்று
பிசாசை வென்று
நிஷ் டாங்க
யோகமும் செய்வார்
மரித்த
ஆத்துமாக்களை,
எடுத்து லோகமே
விட்டு
மா
பர தீசிணி
லேகிட ஆபிர
காமுடை மடியதி லேவிட அறிகுவர்
- திக்
4. உயிர்த் தெழுந் தோர்க ளெல்லாம்
ஒன்றாகி டாத படி
ஒழுங்குட னேபிரிப்பா
ரன்று
பரிசுத்த
வான்கள் வேறு
பாவிகள் தானும்
வேறாய்ப்
பகுத்து நிறுத்திக்
கிறிஸ்து
முன்பு
ஞாய விதி நடக்கும்
போது மாதூ
தர்களும்
நடுங்குவர்
மீட்பர்க்கும்
மீட்கப்பட்
டோருக்கும்
நாதனே
இயேசுவின் நாமமே
செயமெனத்
- திக்
- S. உவால்டர்
கவிராயர்,
தென்மலை.
Comments
Post a Comment